ஜெகதீசன் முதல் படிதார் வரை எல்லாம் அடுத்த சஞ்சு சாம்சன் தான் – வங்கதேச தொடருக்கான இந்திய அணியை விமர்சித்த சைமன் டௌல்

- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடிய டி20 தொடரை வென்ற இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது. டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இந்த சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், உம்ரான் மாலிக், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டார்கள். இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு இந்த சுற்றுப்பயணம் முழுவதும் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் ஓப்பனிங் முதல் மிடில் ஆர்டர் வரை அனைத்து இடங்களிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது யாரையுமே திருப்தி படுத்தவில்லை.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் பெற்று விட்ட அவர் இந்த சுற்றுப்பயணத்தில் முழுமையாக 6 போட்டிகளில் விளையாடியும் எதிலுமே 20 ரன்களை தாண்டவில்லை. மறுபுறம் காலம் காலமாக வாய்ப்புக்காக தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் வழக்கம் போல இந்த சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளில் வெறும் ஒரு வாய்ப்பை பெற்று அதில் 36 ரன்கள் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் 6வது பவுலர் தேவை என்பதற்காக மனசாட்சின்றி நீக்கப்பட்ட அவருக்கு மற்றொரு அநீதியும் நிகழ்ந்துள்ளது.

அடுத்த சஞ்சு சாம்சன்கள்:

ஏனெனில் இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளிலும் சொதப்பிய ரிசப் பண்ட் அடுத்ததாக வங்கதேசத்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதில் அவரை விட சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமரும் வாய்ப்பை கூட பெறவில்லை என்பது அனைவருக்கும் வேதனையை கொடுக்கிறது. அந்த நிலையில் வங்கதேச ஒருநாள் தொடருக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியில் அசத்தி ரஞ்சி கோப்பையில் அபாரமாக செயல்பட்ட ரஜத் படிதார் தேர்வாகியுள்ளார்.

Patidar

ஆனால் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு கொடுக்காத இந்திய நிர்வாகம் இவரை எதற்காக தேர்வு செய்தது? என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு சஞ்சு சாம்சனே விளையாடியிருக்கலாமே என்று கூறும் அவர் ராகுல் திரிபாதி கடந்த வாரம் இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்த தமிழகத்தின் ஜெகதீசன் போன்ற வீரர்களை தேர்வு செய்தாலும் நீங்கள் ரிஷப் பண்ட்டுக்கு தான் வாய்ப்பு கொடுக்கப் போகிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணி நிர்வாகம் ரஜத் படிதாரை விரும்பி தேர்வு செய்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஏற்கனவே உங்களிடம் ஏராளமான பேட்ஸ்மேன்கள் காத்துக்கிடக்கிறார்கள். குறிப்பாக அந்த இடத்தில் சஞ்சு சம்சன் விளையாடுவதற்கு ஏற்கனவே தகுதியானவராக உள்ளார். ஆனால் அவர்கள் அவரை கழட்டி விட்டுள்ளார்கள். பின்னர் எதற்காக ரஜத் படிதாரை தேர்வு செய்துள்ளீர்கள்? அதாவது நாம் ஏற்கனவே நிறைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பார்த்துள்ளோம். எடுத்துக்காட்டாக கடந்த இரண்டரை வாரங்களுக்கு முன்பாக சென்னையிலிருந்து ஜெகதீசன் எனும் இளம் வீரர் ஏராளமான ரன்களை குவித்தார்”

Simon Doull

“அந்த வகையில் உங்களிடம் ஏராளமான வீரர்கள் உள்ளார்கள். அதே போல் ராகுல் திரிபாதி சிறந்த வீரர் அவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் நாம் எதிர்பாராத அளவுக்கு அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தக்கூடிய நல்ல டி20 வீரர்களில் ஒருவர். ஆனால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்காக இடத்தை நிரப்பும் வகையில் வாய்ப்பு கொடுங்கள். ஏனெனில் அதில் நீங்கள் இன்னும் முழுமை அடையவில்லை” என்று கூறினார்.

அதாவது எத்தனை இளம் வீரர்களை தேர்வு செய்தாலும் அவர்களுக்கு நிலையான வாய்ப்பை கொடுக்கப் போவதில்லை என்று அணி நிர்வாகத்தை சாடிய சைமன் டௌல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறும் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மற்றொரு தரமான விக்கெட் கீப்பரை உருவாக்குவது அவசியமென்று கூறியுள்ளார். ஆனால் அந்த இடத்தில் ரிஷப் பண்ட் தவிர்த்து சஞ்சு சாம்சன் உட்பட யாருக்குமே நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement