ரஹானேவிற்கு பதிலாக 4 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள 2 வீரர்கள் – இவர்கள்தான்

Rahane-4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலைப் வகிக்கின்றன. இந்நிலையில் இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக துணை கேப்டன் ரஹானே மிகவும் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் அவர் நான்காவது போட்டியில் விளையாட கூடாது என்றும் அவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துக்களும் வலுவாக எழுந்துள்ளன.

இந்நிலையில் மோசமான பார்மில் இருக்கும் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், புதிய வீரரை பரிசோதிக்கும் வகையிலும் இந்திய அணி அடுத்த டெஸ்டில் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் ரஹானேவிற்கு பதிலாக வாய்ப்பினை பெற இரண்டு வீரர்கள் அணியில் தற்போது தயாராக உள்ளனர். அதில் ஒருவர் ஹனுமா விஹாரி : ஏற்கனவே இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விஹாரி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவருக்கான இடம் நிலையாக கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலிய தொடரின் போது தனது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்தும் தற்போது பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் நிச்சயம் ரஹானேவிற்கு மாற்று வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

sky 1

அதே போன்று இரண்டாவதாக சூர்யகுமார் யாதவ் : ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சமீபத்தில் அறிமுகமான இவர் அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக ரஹானேவிற்கு மாற்று வீரராக இவரும் களமிறங்க ஒரு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement