பண்ட் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படாததற்கு காரணம் இதுதான் – உண்மையை சொன்ன கோலி

Pant
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Pant

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட விக்கெட் கீப்பர் சஹா அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் தற்போது இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கீப்பராக விளையாடி வரும் பண்டும் இடம்பெற்றுள்ளார். இருப்பினும் முதல் போட்டிக்கு கோலி சஹாவை தேர்வு செய்துளார்.

மேலும் பண்ட் நீக்கம் குறித்து கோலி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்த தொடரில் விக்கெட் கீப்பராக பண்ட்டை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு பதிலாக சஹாவை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் சஹா தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டார். அவர் உலகின் மிகச்சிறந்த கீப்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Saha

அவர் சிறப்பாக கீப்பிங் செய்வது மட்டுமின்றி கிடைக்கும் வாய்ப்புகளில் அவ்வப்போது சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இந்தியாவில் மைதானங்கள் அதிக அளவு சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்து திரும்பும் என்பதால் சரியான விக்கெட் கீப்பரை தெரிந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சஹாவை தேர்ந்தெடுத்துள்ளோம். பண்டிடம் திறமை இருக்கிறது இருப்பினும் அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். மேலும் அவர் தனது திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவே அவரை இந்த தொடரில் தக்க வைத்து உள்ளோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement