நடராஜன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கபடாததற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ

Nattu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த நீண்ட தொடரில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

IND-1

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்திய அணி கலந்துகொள்ளும் அடுத்த தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர் .அது தவிர இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கபடாமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனால் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

nattu 2

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிக்காததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்காரணமாக அவரது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு அணியில் இருந்து இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement