தோனி தற்போது எடுத்துக்கொண்டிருக்குக்கும் ஓய்விற்கு உண்மை காரணம் இதுதான் – விவரம் இதோ

Dhoni Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பெற்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.

Dhoni 1

- Advertisement -

இந்தத் தொடரை அடுத்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தோனி ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தோனி வேண்டுமென்றே ஓய்வினை கேட்கவில்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்த காரணமாகவே அவர் ஓய்வு கேட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு எதிராகன போட்டிக்கு முன் விளையாடிய அவர் மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு ஓய்வு எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த காயம் தற்போது வரை தொடர்வதாலும் மேலும் முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Dhoni

இதனை தோனிக்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. அதன்படியே தோனி உலக கோப்பை தொடருக்கு பிறகு தனக்கு ஓய்வு வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் தனது காயத்தில் இருந்து தன்னை மீட்டு எடுக்க அவர் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement