கோலி மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம். பாதுகாப்பு அதிகரிப்பு – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி டெல்லி மைதானத்தில் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது கோலியின் மீதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகாமுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது.

இந்த கடிதத்தில் கோலி மீதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அந்த போட்டியை காண வரும் அரசியல் கட்சி தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ஒரு உண்மையான செய்தி யாதெனில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Kohli-1

இதனால் கோலி அந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவே இது கோலியை குறிவைத்து வெளியான ஒரு புரளி கடிதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க கூடாது என்பதற்காக போட்டி நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகப்படுத்த பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement