தோனியாகவே மாறியிருந்த சுஷாந்த் கடைசியாக அவரிடம் என்ன பேசினார் தெரியமா ? – விவரம் இதோ

Sushant-4
- Advertisement -

தோனியின் பயோபிக் படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு இந்திய திரை உலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sushant 5

- Advertisement -

இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புட் உடனான தனது நினைவு குறித்து தோனி பயோபிக் படத்தின் தயாரிப்பாளரான அருண் பாண்டே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இப்போதுதான் சுஷாந்தின் மரணம் குறித்து அறிந்தேன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

அவரது சிரிப்பு எனது மனதில் இன்னும் அகலவில்லை. நான் சுஷாந்த் மற்றும் தோனி ஆகியோருடன் படத்தை புரமோட் செய்வதற்காக நிறைய நேரம் ஒன்றாக பயணித்து இருந்தேன். இந்தப் படத்துக்காக ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சுஷாந்த் எங்களுடன் செலவிட்டார். மேலும் தோனியின் மேனரிசம் முழுவதையும் அப்படியே வெளிப்படுத்தினார்.

Sushant

அச்சு அசலாக தோனியை போலவே நடந்து கொண்டார். அதனைப் பார்த்து தோனி அவரிடம் அச்சு அசலாக என்னைப்போலவே செய்கிறாய் என கேட்டதற்கு “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அண்ணா என்னிடம் உங்களை இனி தேடுவார்கள்” என்று சுஷாந்த் பதிலளித்தார். அத்தனை திறமையான நடிகர் தோனியின் மேனரிஸங்களை உள்வாங்கி அப்படியே மாறியிருந்தார். கிரிக்கெட் விளையாடும் காட்சிகளிலும் அத்தனை நேர்த்தியாக அவர் நடித்திருந்தார் என்று கூறி உள்ளார்.

Sushant 3

மேலும் சுஷாந்த் குறித்து தொடர்ந்து பேசிய அருண் பாண்டே : இத்தனை சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை செய்ய காரணம் தோனியை அவர் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டதுதான் அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் பெரும் வருத்தமாக அமைந்துள்ளது. தோனியை போலவே அவரும் சிறிய ஊரிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர் அதனால்தான் தோனியை போலவே அவரால் நடிக்க முடிந்தது மேலும் அவர் சாதித்துக் காட்டினார் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement