தோனி “தி அன்டோல்ட் ஸ்டோரி” படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் தற்கொலை – அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்

Sushant
- Advertisement -

கடந்த 2011 ஆம் ஆண்டு ‘MS Dhoni: The Untold Story’ என்ற தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தவர் சுஷந்த் சிங் ராஜ்புட். இவருக்கு தற்போது 34 வயதாகிறது. மும்பையில் வசித்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Sushant 1

- Advertisement -

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கிட்டத்தட்ட தோனியாக பாவித்து வந்தனர். குறிப்பாக தோனியின் ரசிகர்கள் இவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வந்தனர். இவரும் அதற்கு சளைத்தவரல்ல. மிகப்பெரிய தோனி ரசிகராகவே இருந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு அணிக்காக விளையாடிய போது கேப்டன் பதவியில் இருந்து அவர் நிராகரிக்கப்பட்ட அந்த தருணத்தில் அந்த அணியின் உரிமையாளரையும் கடுமையாக ட்விட்டரில் சாடியது குறிப்பிடத்தக்கது. அதற்கும் ஒரு படி மேல் போய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுரவ் கங்குலியை திட்டியிருந்தார். ராஜ்புட் அந்த அளவிற்கு தோனியின் ரசிகர்.

Sushant 2

இவர் அதனை தாண்டி ஒரு சமயத்தில் பல குடும்பங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவி கேட்ட ஒருவரது வங்கிக் கணக்கிற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலுத்தி அவர் சார்ந்த ஊர் மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளார். கடைசியாக இறப்பிற்கு முன்னர் தனது அம்மாவிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்து இருந்தார் சுஷந்த் சிங் ராஜ்புட் .

- Advertisement -

Sushant 3

இந்நிலையில் இப்படிப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் உலகத்திலும் பாலிவுட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலைக்கு தற்போதுவரை என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாத செய்திகள் வந்துள்ளது.

 

Advertisement