INDIA : இந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு இந்த நிலைமை தான் – ரெய்னா பேட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Raina
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் உள்ளன. இந்த தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup 1

இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ரெய்னா கூறியதாவது : இந்த உலகக்கோப்பை தொடர் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தும். அதிலும் குறியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெரும் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த கடினமான சூழ்நிலையினை உண்டாக்கும். ஏனெனில், இந்திய அணி வெற்றியுடன் தொடரை துவங்கினால் இந்திய அணியின் வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதேபோன்று பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்து தற்போது ஏமாற்றத்தில் உள்ளது.

India v Pakistan

இதனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை இந்த உலககோப்பை தொடரிலும் தோற்கடிக்கும். இனிவரும் காலங்களிலும் இந்திய அணி உலககோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தனது ஆதிக்கத்தை தொடரும் என்று ரெய்னா கூறினார். இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் தோல்வி அடைந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement