என்னை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை – மனம்வருந்தி புலம்பிய இந்திய வீரர்

Raina
- Advertisement -

இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் சமீபகாலமாகவே இந்திய அணி தேர்வில் அதிக சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கித் தவித்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்கு ராயுடுக்கு இடம் அளிக்காதது. ஆல்ரவுண்டராக விஜய் ஷங்கரை தேர்வு செய்தது என தொடர்ந்து தவறான பல இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்தேர்வுகளை அவர்கள் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி நன்றாக விளையாடும் வீரர்களை திடீரென அணியில் இருந்து நீக்கி அவர்களது ஆட்டத்தை மழுங்கடிக்கவும் செய்துள்ளனர். இதேபோன்று பல குளறுபடிகள் தேர்வுக்குழுவினர் மத்தியில் நடந்துள்ளது.

Shankar 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இருந்து மோசமான பார்ம் காரணமாக ஒதுக்கப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் ரெய்னா இனி மீண்டும் அணியில் இடம் பிடிப்பது கடினம் என்று தோன்றுகிறது.

ஆனால் மீண்டும் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்புக்கான காலம் கடந்துவிட்ட நிலையில் தற்போது சீனியர் வீரர்களை தேர்வு குழுவினர் சரியாக நடத்துவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியில் நுழைய யோ யோ டெஸ்ட் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி நான் யோயோ டெஸ்டில் தேர்ச்சி அடைந்த போதும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Raina

மேலும் அதற்கான காரணமும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் இது குறித்து கூறுகையில் : சீனியர் வீரர்களுக்கு என தேர்வுக்குழுவில் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி அணிக்காக தான் முதலில் விளையாடுகிறார். முதல் நாள் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு சென்று அடுத்த நாள் வரும்போது வாய்ப்பு இல்லை என்றால் அதற்கான காரணம் தெரிய வேண்டும்.

- Advertisement -

அதன்படி ஏதாவது என்னிடம் குறை இருந்தால் அதை என்னிடம் சொன்னால் தானே அதை சரி செய்ய கடினமாக உழைக்க முடியும். அதைவிடுத்து எந்த காரணமும் சொல்லாமல் என்னை அணியிலிருந்து தூக்கியது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. மேலும் என்னை ஏன் அணியிலிருந்து தூக்கினார்கள் என்று சந்தேகம் என் மனதில் தற்போதும் இருக்கிறது. ஆனால் இன்றுவரை காரணமே தெரியவில்லை.

Raina

நம்மை ஏன் அவர்கள் தூக்கினார்கள் நம்மை எவ்வாறு முன்னேற்றிக் கொள்வது என்று யோசிக்க தோன்றுகிறது என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் அவரது இடத்திற்கு மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ஜாதகம், விஜய் ஷங்கர் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement