- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னால இதுக்கு மேல முடியல. அதான் என் மனைவியை கட் பண்ண சொல்லிட்டேன் – புகைப்படத்தை வெளியிட்ட ரெய்னா

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

இதனால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தற்போது தங்கள்து ஓய்வு நேரத்தை தங்களது வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அதுமட்டுமின்றி தங்களது வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு இருப்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடி வந்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் நேற்று முன்தினம் தனக்கு பிடித்தமான பல தகவல்களை வெளியிட்டார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து அத்தியாவசிய சேவைகளையும், தேவைகளையும் பெறமுடியாத நிலையில் இந்தியா இருக்கிறது.

இதன் காரணமாக அதிகமாக தனது அதிகமாக வளர்ந்த தனது முடியை வெட்ட தனது மனைவியை அனுமதித்துள்ளார். சுரேஷ் ரெய்னா இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில். ‘இதற்குமேல் என்னால் காத்திருக்க முடியாது,’ ‘எனக்கு உதவ பிரியங்கா இருக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவிற்கு மொத்தம் 52 லட்சம் ரூபாய் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னாவைப் போலவே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி வெட்டி விட்டார் என்று குறிப்பிட தக்கது. இந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Published by