இவர் தொட்டதெல்லாம் தங்கமா மாறுது. இந்திய வீரரை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்த – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த அனைத்து வீரர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக இந்த வெற்றி கிடைத்தது. அதேபோன்று பந்துவீச்சாளர்கள் பின்வரிசையில் பேட்டிங் செய்ய துவங்கி உள்ளதால் இந்திய அணி மேலும் பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது.

IND

- Advertisement -

அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர்,சிராஜ், ஜடேஜா என அனைவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணி பெற்ற இந்த வெற்றியில் ஷர்துல் தாகூரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஷர்துல் தாகூர் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் :

ஆஸ்திரேலிய தொடரின் போது கபா டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார். அதே போன்று தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தது மட்டுமின்றி தனது பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்பட்டார். இவர் நிச்சயம் இந்திய அணி தேடும் நீண்டகால டெஸ்ட் பிளேயராக திகழ்வார் என தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

Thakur

மேலும் இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில் : நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால் தற்போது அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறுகிறது. அதாவது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறார். அவரது பேட்டிங்கில் எந்த குறையும் நாம் சொல்ல முடியாது. அதே போன்று பந்துவீச்சிலும் அசத்தலாக செயல்படுகிறார். நிச்சயம் இது போன்ற வீரர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியமான ஒருவர்.

thakur 2

இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அனைத்து இடங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று தோன்றுகிறது. அதேபோன்று பந்துவீச்சிலும் அவரால் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை அளிக்க முடிகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் தேடலுக்கு கிடைத்த பரிசாக இந்த வீரர் திகழ்வார் என ஷர்துல் தாகூர் குறித்து கவாஸ்கர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement