லண்டன் மீது காதல்.! அங்கிருந்து கிளம்புங்க.! இவர அணியில் போடுங்க.! சுனில் கவாஸ்கர் காட்டம் .!

Sunil-gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததிலிருந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பலதரப்பட்ட மக்கள் இந்திய அணியையும் இந்திய அணி வீரர்களை விமர்சித்த படியும் உள்ளனர். இந்நிலையில் சுனில் கவாஸ்கரும் இந்திய அணியின் செயல் பாட்டினை கடுமையாக சாடியுள்ளார். ஆரம்பம் முதலாலே இந்திய அணி செய்யும் தவறுகளை சுட்டி காட்டி வந்த அவர் தற்போது மேலும் ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

sunil1

- Advertisement -

அதாவது கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டி நான்காம் நாளே முடிவடைந்து அடுத்த போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெறவுள்ளது இந்நிலையில் வீரர்கள் லண்டனிலே இருக்கிறார்கள் இதனை குறிப்பிட்டு சொன்ன கவாஸ்கர் “லண்டன் மீது உள்ள காதல் போதும் பயிற்சியை செய்யுங்கள்” என கடுமையாக சாடியுள்ளார். இந்திய அணி பயிற்சியினையும் சரியாக திட்டமிட வேண்டும் அப்போதுதான் போட்டி துவங்கும் போது ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் உங்களால் ஆடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தினேஷ் கார்திக்கினை தூக்கிவிட்டு அந்த இடத்தில் ரிஷப் பண்டினையும் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் போதும் எனவே 6வது வீரராக கருண் நாயர்யும் அணியில் சேர்க்கலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார். கருண் நாயரை அணியில் சேர்த்தால் பின்வரிசை பலப்படும் எனவும் கோலி நடக்க முடியாமலோ அல்லது குனிய முடியாமல் போனாலோ தவிர கட்டாயம் அடுத்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

sunil 2

இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. தோல்வியில் இருந்து மீண்டு திரும்ப நம்பர் 1 அணியாக திரும்ப வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement