எந்தவொரு இந்தியரும் படைக்காத இந்த சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைக்கனும் – வாஷிங்க்டன் சுந்தர் அதிரடி

Sundar-4
- Advertisement -

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 265 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 31 டி20 போட்டிகளிலும், ஒரு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் மூன்று வகையான கிரிக்கெட் அணியிலும் விளையாடி உள்ள வீரர் என்ற சாதனையை 21 வயதிலேயே பெற்றுள்ளார்.

- Advertisement -

தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பெற்று வரும் இவர் நிச்சயம் டெஸ்ட் அணியில் தனது இடத்தை நீண்டகாலத்திற்கு தக்க வைப்பார் என்றே பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் படைக்கப்போகும் சாதனை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

எனக்கு பிடித்த வீரர் என்றால் அது லாரா தான். அவருடைய பேட்டி எனக்கு அவ்வளவு பிடிக்கும் மேலும் மகேந்திர சிங் தோனியின் ஆட்டமும் எனக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தா.ர் அதே வேளையில் எந்த வீரருக்கு அதிக அளவில் மெசேஜ் செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக வீரரான நடராஜனுக்கு தான் தான் அதிகமாக மெசேஜ் செய்வதாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த சாதனையை படைக்க விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் :

Sundar-2

ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது மட்டுமின்றி பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களில் யாரும் இதுவரை ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பதனால் அந்த சாதனையை தான் படைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10 விக்கெட் மற்றும் 100 ரன்களை அடித்த வீரராக வெகு சிலரே உள்ளனர்.

sundar 2

அவர்களில் இயான் போத்தம், ஷாகிப் அல் ஹசன் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் போது 91 ரன்கள் வரை குவித்த வாஷிங்டன் சுந்தர் சதத்தை தவறவிட்டார் அப்போது அவரது தந்தை வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் சதமடித்து இருக்கவேண்டும் என்றும் அவர் இந்த சதத்தை தவறவிட்ட தனக்கு வருத்தமாக உள்ளது எனவும் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement