வாஷிங்டன் சுந்தர் தனது டெஸ்ட் அறிமுக தொப்பியை யாரிடம் இருந்து பெற்றார் தெரியுமா ? – அதிர்ஷ்டசாலி தான்

Sundar-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் இன்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்களை டாஸ் நிகழ்விற்கு பிறகு தெரிவித்த ரஹானே இந்திய அணியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக அகர்வால், சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.

அதன்படி டாஸ் வென்று இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது. கேமரோன் கிரீன் 28 ரன்களுடனும், டிம் பெயின் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக நடராஜன் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

sundar 2

இந்த போட்டியில் தமிழக வீரர்களான சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இதில் வாஷிங்டன் சுந்தர் தனது அறிமுக தொப்பியை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்து பெற்றார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பங்கேற்கும் 301 வீரராக களமிறங்கினார். இந்த டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டை கைப்பற்றி வருவதுபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டாக இந்த வடிவத்தின் மிகப்பெரிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை சுந்தர் வீழ்த்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக டி20 இந்திய அணியில் இடம் பிடித்து வரும் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதும் இனி இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடமிருந்து தனது அறிமுக தொப்பியை பெற்ற சுந்தர் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement