அடுத்த போட்டியில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். அவர்கள் விளையாடுவார்கள் – கோலி உறுதி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் 179 ரன்களை அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைக்க இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Rohith-2

- Advertisement -

இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய கேப்டன் விராட் கோலி வில்லியம்சன் பேட்டிங் செய்த விதம் மற்றும் அவரது அணியை வழிநடத்தி விதம் ஆகியவற்றை புகழ்ந்து அவரே வெற்றிக்கு தகுதியானவர் என்று நினைப்பதாகவும் மேலும் அவர் நிலையில் இருந்து பார்த்தால் அவரது வருத்தத்தை அறிய முடிகிறது என்றும் அதனை தான் புரிந்து கொண்டதாகக் தெரிவித்தார். அதன் பின்னர் மேலும் பேசிய கோலி :

இந்த தொடரை நாங்கள் 5-0 என்ற கணக்கில் கைப்பற்ற முயற்சிப்போம் என்றும் எங்கள் அணியில் இரண்டு இளம் வீரர்கள் வாய்ப்புக்காக வெளியில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சுந்தர் மற்றும் சைனி ஆகியோர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். இந்த யோசனை மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றியை கொடுக்கும் என்றும் நான் நம்புகிறேன் என்று கோலி கூறினார்.

Sundar

டி20 தொடரை வென்றுவிட்டதால் அடுத்த போட்டியில் இந்த மாற்றம் நிச்சயம் நிகழும் என்று தெரிகிறது. இதன் மூலம் அவர் அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களாக ஷிவம் தூபேவிற்கு பதிலாக சுந்தரையும், ஷர்துள் தாகூருக்கு பதிலாக நவதீப் சைனியையும் விளையாட வைக்க உள்ளார் என்று உறுதியாக உள்ளது.

Advertisement