வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் 33 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த இந்திய வீரர் – விவரம் இதோ

Tyagi
- Advertisement -

2009 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடிய வேகப்பந்து வீச்சாளரும், சிஎஸ்கே அணிக்காக விளையாடியவருமான சுதீப் தியாகி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அனைத்து வடிவத்திலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தியாகி 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

tyagi 3

- Advertisement -

அதன் பின்னர் 4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய சுதீப் தியாகி அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ள சுதீப் டியாகி உத்தரப்பிரதேசம் மாநில ரஞ்சி அணியிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Tyagi 2

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தோனி தலைமையிலான முதல் ஒருநாள் போட்டியில் நான் அறிமுகமான அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த கைப், ஆர் பி சி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tyagi 2

இந்த முடிவை எடுத்தது மிக கடினம் தான் இருப்பினும் நான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும் அந்த ஆசை எனக்கு நிறைவேறி விட்டது எனவும் அவர் பதிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement