அடுத்தடுத்த நெருக்கமான போட்டிகள் ஒருநாள் தொடர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்திய – தொடர்நாயகன் ஸ்மித் பேட்டி

Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

Jadeja

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தொடர் நாயகன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : அடுத்தடுத்து நெருக்கமான போட்டிகளில் விளையாடி உள்ளோம். இந்த சீரியஸ் நல்ல கிரிக்கெட்டை வெளிக்கொண்டுள்ளது. மேலும் நல்ல தரமான இரு அணிகளுக்கு இடையே சிறப்பான முதல் தொடரில் நடைபெற்றது. புதிய பந்தில் நான் சிறப்பாக விளையாடிய கருதுகிறேன். சிட்னி மைதானத்தை வைத்து பார்க்கும் போது இந்த மைதானம் வித்தியாசமாக இருந்தது.

indvsaus

இருப்பினும் நாங்கள் நம்பிக்கையுடன் இனிவரும் போட்டிகளுக்காக முன்னே செல்ல உள்ளோம் அடுத்த போட்டி குறித்து எந்த திட்டமும் இதுவரை வைத்திருக்கவில்லை. இருப்பினும் அது நன்றாக அமையும் என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement