மீண்டும் சதமடித்த ஸ்மித். இவரை அவுட் ஆக்கணுனா இதான் வழி போல – இந்திய பவுலர்களை கலாய்த்த ரசிகர்கள்

Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

smith 1

கடந்த போட்டியில் 62 பந்துகளில் சதமடித்து அசத்திய ஸ்மித் இன்றும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதே 62 பந்துகளில் மீண்டும் ஒரு சதத்தை அடித்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் 64 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் ஸ்மித்தை அவுட்டாக்குவதற்கு இது மட்டும் தான் வழி என்று இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பவுலர்களை கலாய்த்து இணையத்தின் வாயிலாக வழங்கி வருகிறார்கள்.

Smith

அதன்படி இந்த தொடர் ஆரம்பித்திலேயே ஸ்மித்தை வீழ்த்துவது கடினம் என்று பலர் கூறி வந்த நிலையில் தற்போது ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் அவர் ஒரு செஞ்சுரி அடித்து அதன் பின்னர் தானாக முன்வந்து தவறுகளை செய்தால் மட்டுமே அவரது விக்கெட்டை இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியும் என்று கிண்டல் செய்து நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement