ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு விராட் கோலி 84, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ராகுல் 42*, பாண்டியா 28 ரன்கள் எடுத்து 48.1 ஓவரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை இந்தத் தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்து. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஃபைனலுக்கு முதல் அணியாகவும் இந்தியா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜஸ்ட் மிஸ்:
மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நாதன் எலிஸ் 2, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் இன்னும் 25 ரன்களை எக்ஸ்ட்ரா எடுத்திருந்தால் இந்தியாவை தோற்கடித்திருப்போம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் 49வது ஓவர் வரை போட்டியை இழுத்து கொண்டு வந்த தங்களுக்கு ஸ்டார்க், கமின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர பவுலர்கள் காயத்தால் இல்லாதது தோல்விக்கு காரணமானதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில் வெற்றி சிறிய இடைவெளியில் இந்தியாவிடம் நழுவியதாக கூறும் ஸ்மித் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்கள் பவுலர்கள் நல்ல வேலையை செய்தனர். ஸ்பின்னர்கள் இந்திய அணியை பிடித்து போட்டியை ஆழமாக எடுத்துச் சென்றனர். பிட்ச் ஆரம்பத்தில் கொஞ்சம் சவாலாக இருந்தது. அதில் பேட்டிங்கில் நாங்கள் எங்களது வேலையை செய்தோம். போட்டி முழுவதுமே அது ஒரே மாதிரியாகவே இருந்தது”
அனுபவமற்ற பவுலிங் வேற:
“ஸ்பின்னர்களுக்கு அது கொஞ்சம் பிடித்து, வழுக்கிக் கொண்டு உதவி செய்தது. அது இருதலைப் பட்சமாகவும் இருந்தது. அந்த சூழ்நிலைகளில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. நாங்கள் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஒருவேளை 280 ரன்களுக்கும் மேல் அடித்திருந்தால் நிலமை வித்தியாசமாக இருந்திருக்கும். போட்டியின் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் ஒவ்வொரு விக்கெட்டை அதிகமாக இழந்தோம்”
இதையும் படிங்க: கோலிக்கு இது சாதாரணம்.. நினச்ச அணியை வெச்சு ஆஸியை வீழ்த்திட்டோம்.. ஃபைனலுக்கு தயார்.. ரோஹித் பேட்டி
“இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் அனைவரும் ஒன்றாக வந்து விளையாடினோம். எங்களுடைய பௌலிங் கொஞ்சம் அனுபவம் அற்றது. எங்களது பேட்ஸ்மேன்கள் எழுந்து நின்றனர். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர்கள் மிகவும் வலுவாக விளையாடினார்கள். அந்த வகையில் எங்களுடைய வீரர்கள் தொடர்ந்து பெரிதாக சிறப்பாக முன்னேற்றத்தை சந்திப்பார்கள்” என்று கூறினார்.