சச்சினின் புகைப்படத்தை தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கும் இந்திய வீரர் – சுவாரசிய தகவல் இதோ

sachin tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று முன்தினம் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பிறந்த நாளை தனது ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் தற்போது நம் நாட்டுக்காக அரும்பாடுபட்டு உழைத்து வரும் டாக்டர்கள் மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் என அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை சச்சின் தெரிவித்துள்ளார்.

Sachin

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நேற்று முன்தினம் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில் சிறப்பு நேரலை பேட்டியல் கலந்துகொண்டார். அப்பொழுது ரசிகர்களின் கேள்விக்கு நேரலையில் கலந்துகொண்டு தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இதில் ஸ்ரீசாந்த் பல சிறப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சச்சின் குறித்து அவர் பேசுகையில் :

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்திற்கே கடவுள் அவரின் பிறந்த நாளை “விளையாட்டு தினமாக” கொண்டாட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் தனது வீட்டின் ஒரு அறை முழுக்க சச்சினின் புகைப்படங்களை வைத்துள்ளதாகவும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

Srisanth

அதுமட்டுமின்றி சச்சின் அவரின் நூறாவது சதத்தை பூர்த்தி செய்தபோது அவரை கட்டிப்பிடித்து என் வாழ்வின் மறக்கமுடியாத தருணம், சச்சின் விளையாடிய சமயத்தில் நானும் விளையாடியதும் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். சச்சின் சில சமயங்களில் தனது குடும்பத்தினரை கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவருடன் பழகியது மிகவும் அற்புதமான தருணம்.

- Advertisement -

சச்சின் போன்று ஒரு வீரர் இனி பிறப்பது அரிது. சச்சின் கிரிக்கெட்டுக்கு பிறந்து, கிரிக்கெட்டிற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் ஸ்ரீசாந்த் கூறினார். எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். குறிப்பாக இளம் வீரர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரைகள் அவர்களை சிறப்பாக செயல்பட வைக்கும். ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தததில் கூட சச்சின் பெரும்பங்கு உதவி செய்துள்ளார் என்று ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.

Srisanth 1

எனக்கும் தனிப்பட்ட முறையில் பல அறிவுரைகளை சச்சின் வழங்கி உள்ளார் என்று ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் நீ நீயாகவே இரு, எதற்காகவும் மாறாதே குடும்பமும் தேசமும் எல்லாவற்றையும்விட முக்கியமானது என்ற அறிவுரையை சச்சினை தனக்கு வழங்கியதாகவும் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினின் புகைப்படத்தை தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்குவதாகவும் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement