சென்னை மைதானத்தில் மட்டுமல்ல. இந்த மைதானத்திலும் ரசிகர்கள் முன் தோனி விளையாடுவார் – சீக்ரெட் சொன்ன சி.எஸ்.கே ஓனர்

Srinivasan
- Advertisement -

சென்னையை தவிர தற்போது சேலத்தில் உள்ள வாழப்பாடியில் ஒரு சர்வதேச தரத்திலான மைதானம் உருவாகியுள்ளது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பாக சேலம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைபட்டியில் சர்வதேச தரத்திலான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

Salem

- Advertisement -

இந்த மைதானத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதே நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், ஐசிசி மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னால் ஐசிசி தலைவர் மற்றும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனருமான சீனிவாசன் பேசியதாவது. :இந்த மைதானம் நல்ல இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. கட்டுமான வசதியும் நன்றாக இருக்கிறது.

salem

இந்த ஆண்டில் இங்கு முதல் தரப் போட்டிகள் நடத்தப்படும். அடுத்த ஆண்டில் கண்டிப்பாக ஐபிஎல் போட்டி நடைபெறும். மேலும் தோனி இதே மைதானத்தில் விளையாடுவார் என்று கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனரே இந்த செய்தியை கூறியுள்ளதால் சென்னைக்கு வெளியே உள்ள ஐபிஎல் ரசிகர்கள் படு குஷியாக உள்ளனர்.

Advertisement