230 ரன்ஸ்.. 5 வருடம் கழித்து இந்தியாவுக்காக சாதித்த துபே.. இலங்கையின் மானத்தை காப்பாற்றிய 21 வயது வீரர்

IND vs SL ODI
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அதுதொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிஷாங்கா நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய அபிஷ்கா பெர்னாண்டோ ஆரம்பத்திலேயே 1 ரன்னில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாட முயற்சித்த போதிலும் 14 ரன்களில் சிவம் துபே வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

துபே கம்பேக்:
அதனால் 5 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் விக்கெட்டை சிவம் துபே எடுத்து சாதித்தார். கடந்த 2019இல் அறிமுகமான அவர் சுமாராக செயல்பட்டதால் ஆரம்பத்திலேயே கழற்றி விடப்பட்டார். இருப்பினும் சிஎஸ்கே அணியில் சமீபத்திய வருடங்களில் நன்றாக செயல்பட்டதால் மீண்டும் கம்பேக் கொடுத்து 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியில் பங்காற்றிய துபே தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த துவங்கியுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த சமரவிக்கிரமா 8, கேப்டன் அசலங்கா 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதேபோல மறுபுறம் போராடிக் கொண்டிருந்த நிசாங்காவும் அரை சதமடித்து 56 (75) ரன்கள் குவித்து வாஷிங்டன் சுந்தர் சுழலில் அவுட்டானார். அதனால் 101/5 என தடுமாறிய இலங்கை 150 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது ஜனித் லியாங்கி மற்றும் துணித் வெல்லலகே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

- Advertisement -

6வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் அமைத்த இந்த ஜோடியில் லியாங்கே 20 (26) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த ஹசரங்கா இம்முறை குருட்டுத்தனமாக விளையாடாமல் நிதானத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய வெல்லலேகே அரை சதமடித்து இலங்கையை 200 ரன்கள் தாண்ட வைத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.

இதையும் படிங்க: முதல் இலங்கை ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்தது ஏன்? பிசிசிஐ சோகமான அறிவிப்பு

இறுதியில் அகிலா தனஞ்செயா 17 ரன்களும் வெல்லலேகே 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 66* (65) ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் இலங்கை 230/7 ரன்கள் குவித்தது. அந்த வகையில் 101/5 என சரிந்த போது கை கொடுத்த 21 வயதாகும் வெல்லலேகே இப்போட்டியில் இலங்கையை 200 ரன்கள் தாண்ட வைத்து ஓரளவு மானத்தை காப்பாற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement