இந்திய அணியின் வீரரான இவர் ரன் குவிப்பதை யாராலும் தடுக்க முடியாது – ஸ்மித் புகழாரம்

Smith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கொடி கட்டி பறக்கும் மிக முக்கியமான வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் கோலியும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இருந்து வருகிறார்கள். பல ஆண்டுகளாகவே இவ்விருவரும் போட்டிபோட்டுக்கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரையும் ரசிகர்கள் ரன் மிஷின் என அழைத்து வருகின்றனர்.

Smith

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சிறப்பாக ஆடி வர கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். ஐசிசி தரவரிசை பட்டியலிலும் கோலி ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஸ்மித் சில முக்கியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : ஆமாம் கோலி மிகவும் வியக்கத்தக்க வீரர். அவரது பேட்டிங் வரிசை அவரைப் பற்றி பேசும்.

மூன்று விதமான வடிவங்களிலும் கோலி ஒரு நம்ப முடியாத வீரராக திகழ்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்துவரும் அவர் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் சாதனைகளை முறியடிப்பதை பல ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். அவர் விளையாடும் ஆட்டத்தை பார்க்கும்போது அவர் ரன் எடுக்கும் பசியோடு இருக்கிறார்.

Kohli-2

அப்படி அவர் ரன் குவிப்பதை இன்னும் நிறுத்தவே இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ரன்களை எடுப்பதை தடுக்க நினைக்கிறேன். ஏனெனில் அதுதான் எங்களுக்கு நல்லதாக இருக்கும் என்றும் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement