கோலி மற்றும் தோனி குறித்து ஒரு வார்த்தையில் சொல்லணுனா அது இதான் – ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார்

SKY
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் தனது 30வது வயதில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் தான் முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பில்லாத அவர் அடுத்து தான் களமிறங்கிய முதல் இன்னிங்சிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். அந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 89 ரன்களை குவித்தார்.

sky 1

- Advertisement -

அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள சூர்யகுமார் யாதவ் தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மேலும் தற்போது ஓய்வில் இருக்கும் அவர் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராத் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கையில் அதற்கு சூர்யகுமார் யாதவ் சிறப்பான பதில் அளித்துள்ளார். கோலி குறித்து ஒரு வார்த்தையில் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : “இன்ஸ்பிரேஷன்” என பதிலளித்தார். அதேபோன்று மகேந்திர சிங் தோனி குறித்த கேள்விக்கு : “லெஜெண்ட் “என்று பதிலளித்தார்.

Dhoni

மேலும் மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா குறித்து கேட்கையில் : “ஹிட்மேன்” என்று அவர் ஒரு வார்த்தையில் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது ரசிகர்களின் கேள்விக்கு தனது பாணியில் அதிரடியாக பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement