ரிங்கு சிங் பண்ற இந்த விஷயம் அப்படியே தோனியை பாக்குறது மாதிரியே இருக்கு – சூரியகுமார் யாதவ் புகழாரம்

SKY-and-Rinku
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட இரண்டாவது டி20 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.

அந்த வகையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், இஷான் கிஷன் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். அதேபோன்று மிடில் ஆர்டரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 19 ரன்களையும், ரிங்கு சிங் 31 ரன்களையும், திலக் வர்மா 7 ரன்களையும் குவித்து அதிரடி காட்டினார்.

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்குடன் களமிறங்க ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக அவர்கள் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறிவிட்டு இறுதியாக ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டியது அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்தது. அந்த வகையில் ரிங்கு சிங் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : கடந்த போட்டியின் போது ரிங்கு சிங் விளையாடிய விதத்தை நான் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு திறமையான ஆட்டக்காரர் என்பதை அதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

இதையும் படிங்க : நான் மேட்ச்க்கு முன்னாடி ஒரு விஷயம் மட்டும் நம்ம பசங்க கிட்ட சொன்னேன் – வெற்றிக்கு பின்னர் சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் அவர் விளையாடிய விதம் எனக்கு ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. உங்கள் அனைவருக்குமே அவரைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என்று சிரித்தார். இப்படி சூரியகுமார் கூற காரணம் யாதெனில் தற்போது இந்திய அணியின் பினிஷர் ரோலில் செயல்படும் ரிங்கு சிங் இறுதி கட்டத்தில் தோனியை போன்றே சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து நொறுக்குவதால் அவரை தோனியுடன் ஒப்பிட்டு சூர்யகுமார் யாதவ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement