டி20 உலககோப்பை வென்ற நாளை தனது மார்பில் பச்சை குத்த உள்ள இந்திய வீரர் – என்ன காரணம் தெரியுமா?

SKY
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பார்படாஸ் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 தொடரை வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பெற்ற வெற்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை எந்த ஒரு ஆட்டத்திலையுமே தோல்வியை சந்திக்காமல் இறுதிவரை வெற்றி நடை போட்டு கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பை ஆகியவற்றை நெஞ்சில் பற்றி குத்திக் கொள்ளப் போவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றால் அதனை பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை தற்போது இந்த டி20 உலக கோப்பையை நாங்கள் ஜெயித்து உள்ளோம்.

- Advertisement -

எனவே ஜூன் 29ஆம் தேதியையும், இந்த டி20 உலக கோப்பை டிராபியையும் நான் நெஞ்சில் பதித்துக் கொள்ள போகிறேன். அதேபோன்று ஜூன் 29-ஆம் தேதி என்னுடைய தங்கையின் பிறந்த நாள் என்பதால் அது ஒரு கூடுதல் பரிசாக அவருக்கு அமையும்.

இதையும் படிங்க : பாகிஸ்தானின் பொருள் பலவீனமாகிடுச்சு.. அந்த இந்திய வீரரை பாத்து கத்துக்கோங்க.. பாபருக்கு அப்ரிடி அறிவுரை

என் வாழ்நாளில் இந்த நாள் நினைவில் இருக்க வேண்டும் என்பதாலே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்றும் உலககோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement