களமிறங்கிய 2 பந்திலேயே அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரவைத்த இந்திய வீரர் – விவரம் இதோ

Sky
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போது டாஸ் முடிந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முடித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் மோதி வருகின்றன.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் தடுமாறி வந்த ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக துவக்க வீரர்களாக இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் கோலி ஆகியோர் களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சரமாரியாக இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அடித்து 34 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி என 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் கோலியுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்திலேயே டாப் கியரில் விளையாட தொடங்கினார். தனது மூன்றாவது போட்டியில் விளையாடும் சூரியகுமார் இப்போதுதான் இரண்டாவது முறையாக பேட்டிங் செய்ய களத்தில் வந்தார். ஏற்கனவே கடந்த போட்டியின் போது முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் பந்தில் சிக்சர் அடித்தது மட்டுமின்றி அரை சதம் அடித்து அசத்தினார்.

sky 1

அதனைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் இன்று தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். மேலும் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி அவர் 17 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரி என 32 ரன்களை குவித்து மீண்டும் ஒருமுறை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் கேப்டன் கோலி மற்றும் ஹர்டிக் பண்டியா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர்.

sky 2

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் என்ற பெரிய ரன் குவிப்பை வழங்கினார்கள். கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என 80 ரன்கள் குவித்தார். ஹார்டிக் பாண்டியா 17 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரி என 39 ரன்களை குவித்தனர். இதனையடுத்து தற்போது 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement