இவங்க 2 பேரும் இங்கிலாந்து போனதே வேஸ்ட். கடைசி வரைக்கும் வாய்ப்பே கிடைக்காது – பாவம் அவங்க

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள இரண்டு இளம் இந்திய வீரர்களுக்கு இறுதிவரை வாய்ப்பே கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. அதன்படி இந்த தொடரின் ஆரம்பத்தில் துவக்க வீரராக இடம்பெற்றிருந்த சுப்மன் கில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதால் மாயங்க் அகர்வால் துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவருக்கும் ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டு ஏற்பட அவரது இடமும் பறிபோனது. அதற்கு முன்னதாக வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியதால் அணியில் உள்ள வீரர்களின் சமநிலையை கருத்தில் கொண்டு இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ப்ரித்வி ஷா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தொடரை முடித்து இங்கிலாந்து பயணித்தனர்.

sky

அப்படி இலங்கை தொடரினை முடித்து இங்கிலாந்து பயணித்த இவர்கள் இருவரும் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத நிலையில் தற்போது 3வது போட்டி இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க உள்ளது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியே 3வது போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதால் இவர்களுக்கு நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது.

அதேபோன்று எஞ்சியுள்ள கடைசி இரண்டு ஆட்டங்களிலும் இவர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான் என்ற நிலையில் இவர்கள் இங்கிலாந்து பயணித்தது தற்போது வீணாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement