தனது தந்தையின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சொன்னதை செய்து சாதித்த இந்திய வீரர் – விவரம் இதோ

Siraj
- Advertisement -

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அந்த தொடரில் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறாத சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்று ஆஸ்திரேலியா பணித்திருந்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்த அவரது தந்தை மாரடைப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். இந்த செய்தி அவருக்கு எட்ட மீளா துயரில் பெரும் வருத்தமுடன் இருந்தார் சிராஜ்.

Siraj

- Advertisement -

அதனால் பெரும் வருத்தத்தில் இருந்த சிராஜை இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தேற்றினர். இருப்பினும் அவருக்கு அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிசிசிஐ சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் தனது தந்தையின் விருப்பம் என்பதற்காக அவர் இறுதி சடங்கில் கூட பங்கேற்காமல் ஆஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். மேலும் தான் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர போவதாகும் அதையே தனது தந்தையின் மறைவிற்கு அஞ்சலி ஆக செலுத்துவதாகும் சிராஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் கேப்டன் கோலி மற்றும் முதல் போட்டியில் காயமடைந்த முகமது சமி ஆகியோர் வெளியேறினர். இதன் காரணமாக முகமது ஷமிக்கு மாற்று பந்துவீச்சாளராக முகமத் சிராஜ் இந்திய அணியில் அறிமுகமானார். 298 ஆவது வீரராக இந்திய அணியில் அறிமுகமான சிராஜ் தனது அறிமுக தொப்பியை ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றார்.

siraj 2

அதன்பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் சிறப்பாக பந்துவீசி மார்னஸ் லாபுஷேன் மற்றும் கிரீன் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக 15 ஓவர்கள் வீசிய அவர் நான்கு மெய்டன்களுடன் 40 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டாக ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த முன்னணி வீரரான மார்னஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

Siraj-1

இந்நிலையில் 2வது இன்னிங்சிலும் தனது அபாரமான பவுலிங்கை வெளிப்படுத்திய சிராஜ் ஹெட், கிரீன் மற்றும் லயன் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு என 5 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்காற்றினார். ஏற்கனவே தந்தை மறைவிற்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடி வெற்றி தேடித் தேடித் தர வேண்டும் அதுவே என் தந்தைக்கு நான் அளிக்கும் அஞ்சலி என்று சபதம் ஏற்று இருந்த சிராஜ் தான் கூறியபடியே தனது தந்தையின் மறைவிற்கு சிறப்பான அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement