இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியால் இந்திய இன்றைய போட்டியில் நான்கு முக்கிய மாற்றங்கள் இருந்தன. அதன்படி கேப்டன் கோலிக்கு பதிலாக ஜடேஜாவும், விக்கெட் கீப்பர் சகாவுக்கு பதிலாக பண்ட்டும் அணியில் இடம் பெற்றனர். அதேபோன்று இந்த போட்டியில் புதுமுக வீரர்கள் 2 பேர் இந்திய அணிக்காக அறிமுகமாயினர்.
முதல் போட்டியில் சொதப்பிய ப்ரித்வி ஷாவிற்க்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணிக்காக அறிமுகமானார்கள். முகமது சிராஜ் ஷமிக்கு மாற்று வீரர் என்றாலும் இந்தியா ஏ அணி மற்றும் ரஞ்சி கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திபின்னர் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை 298 ஆவது வீரராக அறிமுகமாகிய சிராஜ் தனது அறிமுக தொப்பியை தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அன்மையில் தனது தந்தையை இழந்த சிராஜ் இறுதிச் சடங்கிற்கு கூட பங்கேற்காமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இருந்துவிட்டார். மேலும் இந்திய அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பதே எனது தந்தைக்கு நான் செலுத்தும் அஞ்சலி என்றும் அவர் ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் யாரிடம் இருந்து தனது அறிமுக தொப்பியை கைப்பற்றினார் என்ற தகவல் ரசிகர்களிடையே ஆரவாரமாக பார்க்கப்பட்டது. அந்த வகையில் 297 ஆவது வீரராக அவர் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இருந்து தொப்பியை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வினை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும் தற்போதுதான் முதன்முறையாக அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
The moment when your dreams come true. No better stage than the Boxing Day Test to make your maiden Test appearance. @RealShubmanGill is now the proud holder of India’s Test cap 🧢 No. 297. #TeamIndia #AUSvIND pic.twitter.com/G0kdE9TgNU
— BCCI (@BCCI) December 25, 2020
தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதை முதல் போட்டியிலேஏ தற்போது நியாயப்படுத்தி உள்ள சுப்மன் கில் பலரும் எதிர்கொள்ள தயங்கும் இந்த வேகமான ஆடுகளத்தில் கூட அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். பயமின்றிய அவரது ஆட்டம் பலரையும் ஈர்த்துள்ளது. இனி அவர் இதே போன்று ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிரந்தர துவக்க வீரராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.