இந்தியாவில் தற்போது 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்த ஊதிய பட்டியலை வெளியிட காத்திருக்கிறது. அனேகமாக இன்னும் ஒரு சில தினங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அண்மையில் மகளிருக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு விட்டது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய வெகுமதி :
இதன் காரணமாக விரைவில் இந்திய ஆண்கள் அணிக்கான ஒப்பந்த பட்டியலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 29-ஆம் தேதி கௌஹாத்தி நகரில் பிசிசிஐ செக்ரட்டரி சைக்கியா இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருக்கிடையே சென்ட்ரல் காண்ட்ராக்ட் குறித்த மீட்டிங் நடைபெற இருப்பதாகவும் அந்த மீட்டிங் இருக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்பந்த ஊதிய பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு மிகப்பெரிய வெகுமதி காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளினை ஏற்று உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது.
இவ்வேளையில் மீண்டும் கம்பேக் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தான் விளையாடிய அனைத்து போட்டிகளுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு சேர்த்து நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்களுடன் 48 ரன்கள் சராசரியுடன் 243 ரன்கள் குவித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.
அதுமட்டும் இன்றி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கோப்பை, சமீபத்தில் முடிந்த ரஞ்சி கோப்பை விஜய் ஹசாரே கோப்பை என அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்றியுள்ள இவர் தற்போது முன்னணி வீரராக மாறியுள்ளதால் அவருக்கு தகுதி உயர்வு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியாக இருக்கும் இந்த ஒப்பந்த பட்டியலில் ஏ பிரிவில் அவரை 5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தார் ரோட்டில் 280 ரன்ஸ் அடிச்சாலும் கோப்பை ஜெய்க்க அவங்க மனசு வைக்கனும்.. ஹைதராபாத்தை சாடிய வாகன்
கடந்த ஆண்டு பிசிசிஐ அவர்களாகவே வெளியேற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது அவரது மிகச் சிறப்பான கம்பேக் காரணமாக அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை நான்காவது இடத்தில் களமிறங்கி அவர் மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.