சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்து எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.
திலக் வர்மா வரமாட்டார்.. ஷ்ரேயாஸ் ஐயர் நீடிப்பார் : பி.சி.சி.ஐ அறிவிப்பு
இந்த டி20 தொடருக்கு முன்னதாக நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் காயமடைந்த இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா நியூசிலாந்து தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்பார் என்றும் ஏற்கனவே பி.சி.சி.ஐ சார்பாக கூறப்பட்டிருந்தது.
அந்த வகையிலேயே திலக் வர்மாவும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் திலக் வர்மாவுக்கு ஏற்பட்ட காயம் குணம் அடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதனால் திலக் வர்மா இந்த டி20 தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரராக அணியிலிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் :
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் எந்தவொரு அணியும் செய்யாத சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ
திலக் வர்மா காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சியை துவங்கி இருந்தாலும் அவர் முழு உடற்தகுதியை எட்ட கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ஆனால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சி போட்டிக்கு முன்னதாக அவர் பிப்ரவரி 3-ஆம் தேதி மும்பையில் இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறியுள்ளது.



