எனக்கு பிடித்த 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான். இவர்களே எனது ரோல்மாடல் – ஷ்ரேயாஸ் ஐயர் பதிவு

Iyer
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Iyer-3

- Advertisement -

மேலும் தென்னாபிரிக்கா அனுப்பி வைக்கப்பட்ட வீரர்கள் அனைவரையும் உடனடியாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் தனிமை படுத்தியது. எனவே அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் குறைந்த பிறகே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும் இந்த மாதம் இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது தவிர ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு நிலைமை இப்படியே இருந்தால் ஐபிஎல் தொடரை ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli 1

இந்நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது தங்கள் கிரிக்கெட் குறித்த கருத்துக்களை இணையத்தில் ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் இளம் வீரரும், டெல்லி அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் அய்யர் தனக்குப் பிடித்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்து ஒன்றினை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி அவருக்கு இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரையும் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 5 பேரை தான் பிடிக்கும் என்றும் அவர்களையே முன்மாதிரியாக கருதி விளையாடுகிறேன் என்று தனது கருத்தினை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Kohli-3

அவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவ்வப்போது இந்திய வீரர்கள் பலரும் தங்களின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையை இணையத்தில் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement