இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Iyer-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டி.எல்.எஸ் முறைப்படி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலி 114 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்குப் பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஓய்வறையில் எல்லோரும் எந்தவித பதட்டமும் இன்றி மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் போட்டியின் இக்கட்டான நேரங்களில் போது அணியில் எல்லோரும் ஒருவித பதட்டத்துடன் அமைதியாக இருப்பார்கள்.

- Advertisement -

அதுபோன்ற பதட்டமான நேரங்களில் நான் இறங்கி விளையாட விரும்புகிறேன். ஏனெனில் எனது ஆட்டத்தின் போக்கு கடினமான சூழ்நிலையில் மாற்றத்தை உருவாக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அணியை நினைத்து பதட்டம் அடையும் பொழுது நான் அந்த சூழ்நிலையை சமநிலைப்படுத்தும் வகையில் விளையாட விரும்புகிறேன்.

மேலும் சூழல் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை உணர்ந்து எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அணி வெற்றியை நோக்கி எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒன்றை மட்டும் என் மனதில் நிறுத்தி தன்படி விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தருவேன் என்பது மட்டுமே எனது இலக்கு மேலும் அதுபோன்ற சூழ்நிலைகளில் என்னுடைய நம்பிக்கை மற்றும் என்னுடைய திறன் வெளிப்படும் என்று நான் நம்புகிறேன். மேலும் தொடர்ந்து நான் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி எனது அணிக்கு வெற்றியை தேடி தருவேன் என்று ஐயர் கூறினார்.

Advertisement