தினமும் காலை 3 முட்டை சாப்பிடுகிறேன். அதனால் சிறப்பாக செயல்பட முடிகிறது – ஷ்ரேயாஸ் ஐயர் நகைச்சுவையான பதில்

Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார். இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணிக்கு வலு சேர்த்தது யாரெனில் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்று நிச்சயமாக கூறலாம்.

ஏனெனில் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து கலக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது போட்டியில் 41 பந்துகளில் 65 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் அந்த போட்டி முடிந்து அவரை பேட்டி எடுத்தார் சாஹல். அந்த பெட்டியில் ஐயர் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

- Advertisement -

அந்த பேட்டியில் சாஹல் நீங்கள் இவ்வளவு பெரிய சிக்சர்களை அடிக்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது ? அந்த 5 சிக்ஸர்களும் அபாரமாக இருந்தது நீங்கள் அவ்வாறு அடிக்க காரணம் என்ன ? என்று சாஹல் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஐயர் நகைச்சுவையாக கூறியதாவது : துவக்கத்திலிருந்தே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை அடிக்க திட்டமிட்டேன்.

ஏனெனில் பூரான் உங்களது பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அப்பொழுது அதை நினைத்து எனக்கு கோபம் வந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். மேலும் நான் தினமும் காலையில் மூன்று முட்டைகளை சாப்பிடுகிறேன் அதிலிருந்து கிடைத்த பலம்தான் என்னை இந்த 5 பெரிய சிக்ஸர்களை அடிக்க வைத்தது என்று நகைச்சுவையாக சஹாலுக்கு பதிலளித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். ஐயரின் இந்த நகைச்சுவையான பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement