இந்த இடம், அந்த இடல்லாம் வேணாங்க. எந்த இடத்துல வேணுனாலும் இறக்கி விடுங்க நான் சூப்பரா ஆடுவேன் – இளம் வீரர் சவால்

india
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடை பட்டுள்ளதால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

- Advertisement -

ஏற்கனவே உலக கோப்பை தொடரில் இந்திய அணி நான்காம் நிலை வீரர் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் இந்த தொடரிலும் நான்காம் நிலை வீரராக ஆடப்போகிறார் என்ற விவரம் தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணிக்காக விளையாட நான் காத்திருக்கிறேன். மேலும் இந்த தொடரில் என்னை தேர்வு செய்து டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். இந்நிலையில் எனக்கு ஒரு நாள் போட்டியில் விளையாட இடம் கிடைத்தால் நான் நிச்சயம் சிறப்பாக ஆடுவேன். நான் நான்காம் நிலை வீரராக மட்டும் ஆடுவதில் கவனம் செலுத்தவில்லை. எனக்கு 4 ஆம் நிலை மட்டும் வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இல்லை.

Iyer

அணி எந்த இடத்தில் என்னை இறக்க தயாராக இருந்தாலும் அந்த இடத்தில் இறங்கி சூழ்நிலைக்கு ஏற்றார்போல் என்னால் சிறப்பாக ஆட முடியும். மேலும் என்னால் தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட முடியும் என்று ஸ்ரேயாஸ் அய்யர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement