இந்திய அணி இப்படி விளையாடும்னு நான் எதிர்பாக்கல. என்னா அடி – சோயிப் அக்தர் மகிழ்ச்சி

Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் செய்த தவறை திருத்தி இரண்டாவது போட்டியில் புதிய வீரர்களுடன் உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை எளிதாக சமாளித்து வெற்றி பெற்றது.

umesh 1

- Advertisement -

இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரைக் கூட அரைசதம் அடிக்க விடவில்லை. மேலும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் மற்றும் அரை சதம் விளாசி பேட்டிங்கில் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் வகையில் பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறுகையில் : இந்திய அணி இவ்வளவு சிறப்பாக விளையாடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவரை கோணிச் சாக்கில் கட்டி வைத்து அடிப்பது போல ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அடித்துள்ளது என அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Jadeja

இரண்டாவது போட்டிக்கு முன்னர் இந்திய அணி எவ்வாறு ஆஸ்திரேலியா அணியை சமாளிக்க போகிறது என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் சாக்கில் ஒரு நபரை கட்டி வைத்து அடிப்பது போல் இந்திய அணி அடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணியின் உண்மையான போராட்ட குணம் இந்த போட்டியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பல மோசமான விமர்சனங்களை பெற்ற பின்பும் நிதானமாக விளையாடி நம்பிக்கை இழக்காமல் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது பாராட்டுக்குரிய விடயம்.

rahane 2

மேலும் இரண்டாவது போட்டியில் 3 முக்கிய வீரர்கள் இடம்பெறாமல் இருந்தும் ரஹானே தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பட்டது. மேலும் அவரும் சதமடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றது அனைத்தும் சிறப்பானது. ரஹானே களத்தில் அமைதியாக இருந்தாலும் வெற்றிக்காக எப்போதும் அவர் பாடுபட்டு கொண்டே இருந்தார் என்றும் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement