சென்னை ஒருநாள் போட்டி. இந்தியா முதலில் பேட்டிங். இந்திய அணியில் வீரர் அறிமுகம் – விவரம் இதோ

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு. செய்தது அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது :மைதானம் மிகவும் வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்த போட்டியில் அதிக ரன்கள் சேர்த்து எதிர் அணிக்கு கடும் நெருக்கடியில் அளிப்போம் என்று கூறினார். அதன் பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரராக ஷிவம் துபே அறிமுகமாகிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில் : ஆடுகளம் எப்படி செயல்படும் என்று தெரியாது. அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அதனால்தான் பந்துவீச்சினை தேர்வு செய்தோம். இந்திய அணிக்கு சவாலை அளிக்க தயாராக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்திய அணி தற்போது வரை 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement