கோலி, தோனி இருவரில் எனக்கு பிடித்த கேப்டன் இவர்தான் – மனம்திறந்த தவான்

Dhawan
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க இத்தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இருப்பினும் ஐ.பி.எல் தொடரை நடத்தாமல் விட்டால் பெரும் இழப்பு ஏற்படும் என்கிற காரணத்தால் ஏதாவது ஒரு வழியில் இந்த தொடரை நடத்தியே தீர வேண்டும் என்று பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருகிறது.

Dhoni

இந்த ஐபிஎல் தொடர் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனிக்கு ஒரு முக்கிய தொடராக பார்க்கப்பட்டது. ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் தன் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி இனி அணிக்கு திரும்புவது கடினம் என்று நேரடியாக தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி கடந்த 10 மாதங்களாக இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்றும் அதன் காரணமாகவே அவர் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்ட தாக்கும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஐபிஎல் தொடரில் தன் திறமையை நிரூபிப்பதற்காக மார்ச் மாதம் இரண்டாம் தேதி சென்னையில் துவக்கம் பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் காரணமாக அவர் மீண்டும் ராஞ்சிக்கு திரும்பினார்.

Dhawan

இந்த ஐபிஎல் தொடரில் எப்படியாவது சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் தோனி விளையாடுவதைப் பார்க்க ஆக இருந்த ரசிகர்களுக்கும் இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் தோனி குறித்து நிறைய செய்திகள் தினந்தோறும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தோனி நேரடியாக எந்தவிதத் செய்திகளிலும், பேட்டிகளிலும் இடம்பெறுவதில்லை.

- Advertisement -

அவர் குறித்து பலரும் பல கருத்துக்களையும், அவருடன் இருந்த அனுபவங்களையும் கூறிவரும் நிலையில் தற்போது இந்திய அணியின் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் உடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் கலந்து கொண்ட தவான் தனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் ரோகித் சர்மா தான் என்றும் அதே போன்று இந்திய அணியில் உள்ள சிறப்பான பேட்ஸ்மேன் விராட் கோலி என்றும் கூறினார். மேலும் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இருவரின் தலைமையில் மட்டுமே விளையாடியுள்ள தவான் அவருக்கு மிகவும் பிடித்த கேப்டனாக தோனி தேர்வு செய்துள்ளார்.

dhawan 1

அவரது ஆரம்ப கால கட்டங்களில் தோனி அவருக்கு உதவியது மேலும் துவக்க வீரராக அவரை ஜொலிக்க வைக்க முக்கிய காரணமாக அமைந்த தோனியே அவருக்கு பிடித்த கேப்டன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரோகித் சர்மா ஒரு தனித்துவமான பேட்ஸ்மேன் என்றும் கடந்த உலக கோப்பையில் அடித்த 5 சதங்கள் அற்புதமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் கொரோனா வைரஸ் பயத்தில் இருக்கும் இந்நேரத்தில் ஐபிஎல் நடத்தவேண்டும் என்றும் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement