இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மதியம் ஒன்று 1.30 மணிக்கு துவங்கியது. இரு அணிகளுக்கும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு தற்போது பின்ச் மற்றும் ஸ்மித் விளையாடி வருகின்றனர். இதுவரை ஆஸ்திரேலிய அணி 8.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 46 ரன்களை அடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கவர் திசையில் பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தவான் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். அவர் கடைந்த போட்டியின் போதே காயம் அடைந்திருந்தார் எனவே 2 ஆவது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வருவாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.