என்னாச்சு தவானுக்கு ? ரோஹித்துடன் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் – காரணம் இதுதானாம்

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பீல்டிங் செய்யும்பொழுது டைவ் அடித்து தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மேலும் அவர் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வரவில்லை. துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் தவான் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக மீண்டும் ஒரு ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி சற்றுமுன் ஆட்டமிழந்தார். இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட ஒரு பதிவின் படி தவான் தற்போது எக்ஸ்ரே செய்ய சென்றிருப்பதாகவும் அவரின் மருத்துவ அறிக்கையின் படி அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது 10 வீரர்கள் உடனே இந்திய அணி விளையாடும் என்பது உறுதியாகி உள்ளது மேலும் தவான் கையில் கட்டுப்பட்டு இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் தவான் விளையாட மாட்டார் என்று உறுதியாகி உள்ளது.

Advertisement