சுற்றுலா சென்ற ஷிகார் தவனால் படகோட்டிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் ஷிகர் தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பினார். டெஸ்ட் அணியில் இடம்பெறாத தவான் தற்போது ஐபிஎல் தொடருக்கு பின்னர் கிடைத்த நீண்ட ஓய்வினை தனக்கு பிடித்த இடங்களுக்கு சென்று கழித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாரணாசிக்கு சுற்றுலா சென்ற ஷிகார் தவான் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் காலபைரவர் கோயில் என அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் கங்கை நதியில் படகு சவாரியும் செய்திருந்தார். இப்படி அவர் சென்ற இந்த சுற்றுலாவில் படகு சவாரி செய்த போது கங்கை நதியில் பறவைகளுக்கு உணவு கொடுத்துள்ளார். அதனை தவானுடன் சென்ற நண்பர்கள் புகைப்படமாக கேமராவில் பிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தவான் பறவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தேன் என அதற்கு கேப்ஷனுடன் போட்டுள்ளார்.

- Advertisement -

அந்த பதிவு தான் இப்போது அந்த படகை ஓட்டிச் சென்ற படகோட்டிக்கு சிக்கலை கொடுத்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் தற்போது பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரணாசி மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் பறவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்றும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் படகை இயக்குபவர்கள் இடம் சொல்லி இருக்கிறார்களாம்.

ஆனால் அதனையும் மீறி தற்போது தவான் பறவைகளுக்கு உணவை கொடுத்து இருப்பதால் அந்த படகினை மீது ஓட்டிச்சென்ற குறிப்பிட்ட படகோட்டி மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக அந்த படகோட்டி நோட்டீஸ் அனுப்பவும் அரசு முடிவு செய்துள்ளதாம்.

அதே நேரத்தில் சுற்றுலா பயணியாக சென்ற தவானுக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை எனவும், படகோட்டி அனைத்து விடயமும் தெரிந்தும் பறவைகளுக்கு உணவு அளிக்க அனுமதித்தற்காக அவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் தவானால் அந்த படகோட்டி தற்போது சிக்கலில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement