- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் தயார். வந்து இறங்கியாச்சி இந்திய அணியின் ஓப்பனர் போட்ட போஸ்ட் – வைரலாகும் பதிவு

வரும் 12ம் தேதி தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் கொல்கத்தா, தர்மசாலா மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

இருந்தாலும் இந்திய அணியின் காம்பினேஷன் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணி நியூசிலாந்தில் தோற்றுவிட்டது. இதற்காக விராட் கோலி புதிதாக சில உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. இந்த அணியில் ஏற்கனவே காயத்திலிருந்து புவனேஸ்வர் குமார், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக ஒரு சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. துவக்க வீரர்களாக இளம் வீரரான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இறங்க பெரிய வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அதிரடி வீரரான கேஎல் ராகுல் கீப்பிங் பணியை செய்வதுடன் 5வது இடத்தில் களமிறக்கவே அணி நிர்வாகம் ஆசை காட்டும்.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் மற்றும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களான கில், சைனி, குல்தீப் யாதவ் மற்றும் பண்ட் ஆகியோர் முதல் ஒருநாள் போட்டிக்காக தர்மசாலா சென்றடைந்தனர்.

- Advertisement -

மேலும் கடந்த சில தொடர்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த தவான் இன்று அங்கு சென்று இறங்கியதை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தவானின் வருகையால் மயங்க் அகர்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவிர பயன்படுத்தத் தவறிய அகர்வாலை நிர்வாகம் அணியில் இருந்து நீக்கியுள்ளது.

மேலும் ரோகித் சர்மாவிற்கு பதிலாக ப்ரித்வி ஷா விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதனை தர்மசாலா விமான நிலையம் வந்து இறங்கிய தவான் உறுதி செய்து அதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by