டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஷர்துல் தாகூர் – இப்படி ஒரு சாதனையா ?

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி (நேற்று) லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் தனது அதிரடி மூலம் அரை சதம் விளாசி அசத்தினார்.

indvseng

- Advertisement -

ஒருபக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து வெறியேற்ற ஒரு கட்டத்தில் இந்திய அணியானது 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

இதில் மூன்று பிரமாண்டமான சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்த போட்டியின் மூலம் ஷர்துல் தாகூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய அணி வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக கபில்தேவ் திகழ்கிறார். கபில்தேவ் 1982 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

thakur 1

அவரைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக் கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 பந்துகளில் அரைசதம் கடந்து இருந்தார். இதுதான் டெஸ்ட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதமாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் சேவாக்கின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

thakur 2

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஷர்துல் தாகூர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement