இவரிடம் உள்ள திறமைக்கு இன்னும் பல உயரங்களை எட்டுவார் – தமிழக வீரரை பாராட்டிய ஷர்துள் தாகூர்

Shardul-Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

IND

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் நடராஜன் குறித்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடராஜன் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நாம் ஐபிஎல் தொடரிலேயே கண்டிருக்கிறோம். அவரது திறமை அற்புதமானது. அதை வைத்து அவர் இந்திய அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் அடுத்த ஓவரில் அதை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களை திணற வைக்கும் திறமை அவரிடம் உள்ளது. அவரிடம் இருக்கும் இந்த திறமைக்கு இன்னும் பல உயரங்களுக்கு அவர் செல்வார். இவரைப்போன்ற வீரர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nattu

நேற்றைய போட்டியில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான நடராஜன் தான் வீசிய மூன்றாவது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான லாபுஷேன் இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவுசெய்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement