நாளைய போட்டியில் இந்திய வீரரான இவர் விளையாடுவதில் சந்தேகம் – காயத்தில் சிக்கிய அடுத்த வீரர்

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியானது இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாளை துவங்க உள்ளது.

indvseng

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் எந்தவித மாற்றமும் இன்றி முதல் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி களம் இறங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் என்று விராட் கோலி உறுதியளித்திருந்தார். மேலும் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா களமிறங்கி இருந்ததால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவரே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

thakur 2

இந்நிலையில் தற்போது ஷர்துல் தாகூருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் காரணமாக மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 2685 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 அரை சதங்களும், 5 சதங்களும் அடங்கும். இதன் காரணமாக அவர் நிச்சயம் நாளைய போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

Ashwin

அது மட்டுமின்றி கவுண்டி அணிக்காக பயிற்சி போட்டியில் விளையாடிய அஸ்வின் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதால் நிச்சயம் 2வது டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மொயின் அலி அணியில் இணைவார் என்றும் தெரிகிறது.

Advertisement