INDIA : இன்றைய பயிற்சி போட்டியில் சோதனை செய்யப்பட இருக்கும் இரண்டு இந்திய வீரர்கள் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட

india
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

rohith

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து எதிராக தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்து இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் கடந்த பயிற்சி போட்டியில் அணியில் விளையாடாத கேதார் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்து விளையாடுகிறார்கள். இந்த போட்டியில் இவர்கள் இருவருக்கும் ஒரு சோதனை காத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Vijay

கடந்த போட்டியில் கூட ஹார்டிக் பாண்டியா சிறப்பாக ஆடினார். எனவே ஜாதவ் மற்றும் ஷங்கர் ஆகிய இருவரும் இன்று சிறப்பாக ஆடினால் மட்டுமே உலக கோப்பை விளையாடும் அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும். எனவே இவர்கள் இருவருக்கும் இன்று கடுமையான சோதனை காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

Advertisement