வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஹமது ஷமி விளையாட உள்ளார்.
இந்நிலையில் தற்போது முஹமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஷமிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்கனவே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் ஷமியின் வீட்டிற்கு சென்று அத்துமீறி உள்ளே நுழைந்து அவரது அம்மாவை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் ஷமி தனது பண பலத்தால் இதுபோன்று பொய்யான வழக்குகளை ஜோடிக்கிறார் என்று ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணைக்கு பின்பே உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.
ஹசின் ஜகான் ஏற்கனவே ஷமி மீது வரதட்சணை புகார் மற்றும் சூதாட்டம், பெண்களுடன் தொடர்பு என்று பல புகார்களை அவர் மீது கூறி நீதிமன்றத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.