Worldcup : பெங்களுருவில் நான் எடுத்த இந்த தீவிர பயிற்சியே. நான் உ.கோ அணியில் இடம்பிடிக்க காரணம் – ஷமி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Shami
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

shami-1

இந்நிலையில் இந்திய அணியில் தான் தேர்வானது குறித்து ஷமி கூறுகைலயில் : 2015 ஆம் ஆண்டு நான் உலகக்கோப்பையில் பங்கேற்று சிறப்பாக ஆடினேன். அதன்பிறகு 2 ஆண்டுகள் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தேன். அதனால் எனது உடல் எடை அதிகரித்து பின்பு எனது பந்துவீச்சில் வேகமும் குறைந்தது. இதனால் பெங்களூரு தேசிய அகாடமியில் தீவிர பயிற்சியில் இருந்தேன்.

shamii

அப்போது எடுத்த கடுமையான பயிற்சியால் எனது எடையும் குறைந்து, வேகமும் அதிகரித்தது. அதன்பிறகு மீண்டும் 2018 ஆம் ஆண்டு அணியில் இடம்பெற்ற பிறகு மீண்டும் எனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தேன். தொடர்ச்சியாக நான் சிறப்பாக வீசிவந்த காரணத்தில் எனக்கு மீண்டும் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்று ஷமி கூறினார்.

Advertisement